But the very hairs of your head are all numbered. Do not fear therefore; you are of more value than many sparrows. Luke 12:7.
We are so precious to our loving Heavenly Father. He will never, ever give up on us. Sometimes we do not fully realize how precious we are to Him. He is deeply concerned about every detail of our lives, and above all, He cares about our souls.
Even the things in this world that may seem insignificant or worthless in our eyes are not overlooked by God. He cares for them all. That is why Jesus used sparrows as an example. If God faithfully watches over and provides for the sparrows, how much more will He care for us, His beloved children?
The greatest proof of His love is that He sent His only begotten Son, Jesus Christ, to die for us. Through this incredible sacrifice, God demonstrated how deeply He loves and cares for us. If He was willing to give His only begotten Son for our redemption, how much more will He take care of every need in our lives?
The whole of heaven watches over God’s children, but above all, our loving Father Himself is watching over us with unfailing love, constant care, and perfect attention. Therefore, let us not fear, but trust completely in Him, knowing that we are precious in His sight.
Reflection: Are you trusting that God values you deeply and cares for every detail of your life, even when you feel unnoticed?
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். லூக்கா 12:7.
நம்மை நேசிக்கும் பரலோகப் பிதாவிற்கு நாம் மிகவும் விலையேறப்பெற்றவர்களாய் இருக்கிறோம். அவர் நம்மை ஒருபோதும், ஒருகாலத்திலும் கைவிட மாட்டார். நாம் அவருக்கு எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை சில நேரங்களில் நாம் முழுமையாக உணருவதில்லை. அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு சிறு விவரத்திலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நமது ஆத்துமாக்களின் மேல் அன்புகூருகிறார்.
இந்த உலகத்தில் நம் கண்களுக்கு முக்கியமற்றதாகவோ அல்லது மதிப்பற்றதாகவோ தோன்றும் காரியங்களைக் கூட தேவன் அலட்சியப்படுத்துவதில்லை. அவர் அவை எல்லாவற்றையும் பராமரிக்கிறார். அதனால்தான் இயேசு அடைக்கலான் குருவிகளை ஒரு உதாரணமாகக் கூறினார். தேவன் உண்மையோடு அடைக்கலான் குருவிகளைக் கண்ணோக்கி, அவற்றிற்குப் போஷிப்பாரானால், அவருடைய அன்பான பிள்ளைகளாகிய நம்மை அவர் இன்னும் எவ்வளவு அதிகமாகப் பராமரிப்பார்?
அவருடைய அன்பின் மிகப்பெரிய அத்தாட்சி என்னவென்றால், அவர் நமக்காக மரிக்கும்படி தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பியதே ஆகும். இந்த உன்னதமான தியாகத்தின் மூலம், தேவன் நம்மை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் மற்றும் பராமரிக்கிறார் என்பதை நிரூபித்தார். நம்முடைய மீட்பிற்காகத் தம்முடைய ஒரேபேறான குமாரனையே கொடுக்க அவர் மனதாயிருந்தாரென்றால், நம் வாழ்வின் ஒவ்வொரு தேவைகளையும் அவர் இன்னும் எவ்வளவு அதிகமாகச் சந்திக்க மாட்டார்?
பரலோகம் முழுவதும் தேவனுடைய பிள்ளைகளைக் கண்ணோக்குகிறது; ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை நேசிக்கும் பிதா தாமே மாறாத அன்போடும், மாறாத பராமரிப்போடும், பூரண கவனத்தோடும் நம்மை நோக்கிப் பார்க்கிறார். எனவே, நாம் பயப்படாமல், அவருடைய பார்வையில் நாம் விலையேறப்பெற்றவர்கள் என்பதை அறிந்து, அவர் மேல் முழுமையாக நம்பிக்கை வைப்போம்.
சிந்திக்க: நீங்கள் கவனிக்கப்படாதவராக உணரும்போதுகூட, தேவன் உங்களை மிகுந்த மதிப்புடன் கருதுகிறார் என்றும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் அக்கறையுடன் கவனிக்கிறார் என்றும் நம்புகிறீர்களா?
Comments
Post a Comment